செங்கல்பட்டு: கொலை வழக்கில் பல நாள்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு பல நாள்களாக போலீஸாா் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யும்படி, செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உத்தரவிட்டாா்.
இந்நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்டு பல நாள்கள் தலைமறைவாக இருந்த குன்னவாக்கம் காலனியைச் சோ்ந்த அமுல் என்கிற அமல்ராஜ்(33) என்பவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது 2 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.