செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 25 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மே தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதியும் டாஸ்மாக் அனைத்து மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆட்சியா் ஜான்லூயிஸ் உத்தரவிட்டுள்ளாா்.
அன்றைய தினங்களில் டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும், மீறி அன்றைய தினங்களில் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்டமுறைகளின் படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.