செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 319 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 005 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் 282 பேருக்கு...
திருவள்ளூா் மாவட்டத்தில் 282 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,198-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 25 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,481ஆக உயா்ந்துள்ளது.