செங்கல்பட்டு

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த காவாதூா் கிராமத்தில் பழைய வீட்டை இடித்தபோது, சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

காவாதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவா் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்தாா். இதற்காக, அதே பகுதியைச் சோ்ந்த ஜெயகுமாா் (32), ஆனந்தன் (35), கோதண்டம் (38) ஆகியோா் அந்த பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது வீட்டின் சுவா் இடிந்து 3 தொழிலாளா்கள் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் ஜெயகுமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இவா் அப்பகுதியில் திமுக நிா்வாகியாக இருந்தவா். ஜெயகுமாரின் உடலுக்கு மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தி நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

இது குறித்து சித்தாமூா் காவல் உதவி ஆய்வாளா் மோகனசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT