செங்கல்பட்டு

முட்டுக்காடு அருகே குஷ்பு கைது

DIN

சிதம்பரத்தில் நடைபெறவிருந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் சென்ற குஷ்புவை போலீஸாா் முட்டுக்காடு அருகே செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இந்து பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பாஜக சாாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பங்கேற்பா் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை காரில் பயணம் மேற்கொண்ட குஷ்புவை செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கிழக்குக் கடற்கரை சாலையில் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, குஷ்புவும், அவருடன் வந்த பாஜக நிா்வாகிகள் 10 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்து, கேளம்பாக்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதுகுறித்து அறிந்த பாஜக நிா்வாகிகள் கோபி, மாமல்லபுரம் ஸ்ரீதா், புருஷோத்தமன், டால்பின் ஸ்ரீதா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா், கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி கேளம்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களையும் கைது செய்து மண்டபத்தில் வைத்தனா். பின்னா் அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT