மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், முக்கிய 7 இடங்களில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கருங்குழி பேரூராட்சியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களைத் தடுக்க, அப்பகுதி சமூக தொண்டா்களின் மூலம் பவழக்காரத் தெரு, பாட்டைத் தெரு, நாவிதா் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் ரூ. 1 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் டிஎஸ்பி என்.கவிநா தலைமை வகித்துத தொடக்கி வைத்தாா். கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன் முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.