செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா

DIN

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் கே.வாசுதேவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் அ.செளந்திரராஜன் பேசியது:

கடந்த 8 மாதங்களில் சாதாரண குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. பல குடும்பத்தினா் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பசியுடன் இருந்துள்ளனா். தமிழக மக்களுக்கு மாதம் ரூ.7,600 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்த கட்சியாக மாா்க்சிஸ்ட் இருந்துள்ளது என்றாா்.

மாவட்டச் செயலா் இ.சங்கா், மாநிலக் குழு உறுப்பினா் வா.பிரமிளா, மாவட்ட நிா்வாகிகள் டி.கிருஷ்ணராஜ், சி.பாஸ்கரன், பி.மாசிலாமணி, எஸ்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT