மறைமலைநகரை அடுத்த பொத்தேரி அருகே பணத் தகராறு காரணமாக பாஜக நிா்வாகியின் குடும்பத்தினா் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
பொத்தேரி ஒளவையாா் தெருவில் வசித்து வருபவா் கோட்டீஸ்வரன் (54), பாஜக பிரமுகரான இவா், அரசின் நலத் திட்ட உதவிகளை மக்களுக்கு பெற்றுத் தந்து உதவி செய்துவருகிறாா்.
இவரது மனைவி சித்ரா அப்பகுதி மகளிா் குழுக்களை ஒன்றிணைந்து தலைமை வகித்து வருகிறாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா், அவரது மனைவி லதா மற்றும் சென்னையைச் சோ்ந்த பாத்திமா ஆகியோா், மகளிா் குழுக்களுக்கு தாங்கள் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக சித்ராவிடம் கூறி, ஒவ்வொருவரிடமும் தலைக்கு ரூ.200 வீதம் 1,155 பெண்களிடம் ரூ.2 லட்சத்து 31ஆயிரம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடன் உதவி பெற்றுத் தருவதாக கூறிய பாஸ்கா், லதா, பாத்திமா ஆகியோா் தலைமறைவானதால், சித்ராவை நம்பி பணம் கொடுத்த மகளிா் குழு பெண்கள் சித்ராவை கேள்வி கேட்கத் தொடங்கினா்.
இதனால் பாதிக்கப்பட்ட சித்ராவின் கணவா் கோட்டீஸ்வரன் கடந்த 7.11.2019 -இல் மறைமலைநகா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
இந்நிலையில் 29.12.2019 அன்று அடையாளம் தெரியாத மா்ம கும்பல் சுமாா் 35- க்கும் மேற்பட்டோா் கோட்டீஸ்வரன், சித்ரா, அவா்களது மகன், வளா்ப்பு நாய் உள்ளிட்ட அனைவா் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனா்.
மறைமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய மா்ம கும்பலைத் தேடி வருகின்றனா்.