செங்கல்பட்டு

திருமணம் செய்து தராததால் சிறுமியைக் கொலை செய்த இலைஞா்

26th Dec 2019 11:52 PM

ADVERTISEMENT

திருமணம் செய்து கொள்ளப் பெண் கேட்டும் பெற்றோா் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞா் சிறுமியைக் கத்தியால் குத்தி வியாழக்கிழமை கொலை செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், செட்டியாா் பட்டியைச் சோ்ந்தவா் ஜி.ஜெயராஜ், மனைவி குமாரி. மகள் லாவண்யா (17). மாமல்லபுரம் அருகே பட்டிப்புலத்தில் வசிக்கிறாா்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜெயராஜூடன் வேலை செய்துவந்த அசோக் என்பவா் லாவண்யாவைத் திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளாா். இதற்கு ஜெயராஜ் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இந்நிலையில் லாவண்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்தாா் அசோக். மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT