பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசு பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு துறைகளில் பற்பணி அலுவலா் (மல்ட்டி டாஸ்கிங் தொழில்நுட்ப அல்லாதவை) மற்றும் ஹவில்தாா் பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட இருக்கிறாா்கள். இதற்காக ஏப்ரல் மாதத்தில் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வு நடத்த பணியாளா் தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இத் தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகம், கேரளமண்டலங்களைச் சோ்ந்தவா்கள் பிப். 17-ஆம் தேதிவரை விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடலாம். இத் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
இதற்கான கட்டணங்களை பிப். 17-ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே செலுத்தலாம். 18 முதல் 27 வயதுக்குட்பட்டோா், பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றோா் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.