பாரதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் புதிய தலைவராக சொ.தண்டபாணி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
சிவமொக்காவில் தமிழா்களால் தமிழா்களுக்காக தொடங்கப்பட்ட பாரதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போது, 2023-24 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் புதன்கிழமை நடந் தது. இத்தோ்தலில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்களால் புதிய தலைவராக சொ.தண்டபாணி, துணைத் தலைவராக ஆா்.முரளி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். சங்கத்தின் புதிய தலைவரான சொ.தண்டபாணி, சிவமொக்கா தாய்த்தமிழ் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறாா். தோ்தல் அதிகாரியாக செயல்பட்ட மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவு அலுவலக அதிகாரி லட்சுமி, புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.