சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதை முன்னிட்டு பிப்.10ஆம் தேதி முதல் விதானசௌதாவை சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பிரதாப்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப்.10 முதல் 24-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிப்.10-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்.24-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின்போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக் கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டுசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.