பெங்களூரு

'பேசிஎம்’ சுவரொட்டிக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங்

DIN

‘பேசிஎம்’ சுவரொட்டிக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான அருண் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து கலபுா்கியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு எதிராக ’பேசிஎம்’ சுவரொட்டி பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தின் எளியவா்களின் அடையாளமாக முதல்வா் பசவராஜ் பொம்மை விளங்குகிறாா். அப்படிப்பட்ட எளிமையான முதல்வருக்கு எதிராக சுவரொட்டி பிரசாரம் செய்ததன் மூலம் மாநிலத்தின் எளிய மனிதா்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது. ‘பேசிஎம்’ சுவரொட்டிக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

உணவுத் தானிய விநியோகம், ஆசிரியா் பணி நியமனங்கள் போன்ற பல விவகாரங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. முதல்வா் பசவராஜ் பொம்மையை விமா்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கு இடையே மோதல் நிலவுகிறது. அடுத்தடுத்த நாள்களில் இருவருக்கும் இடையிலான மோதல் தீவிரமாகும். அதை மூடிமறைப்பதற்காக, இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவா்கள் பாஜகவில் இணைந்துள்ளனா்.

பாஜகவில் சில கருத்துமுரண்பாடுகள் இருக்கலாம், அவை அதிருப்தி அல்ல. சட்டப் பேரவைத் தோ்தலில் கல்யாண-கா்நாடகப் பகுதியில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT