பெங்களூரு

கனரா வங்கிக்கு புதிய செயல் இயக்குநா் நியமனம்

DIN

கனரா வங்கியின் புதிய செயல் இயக்குநராக அசோக் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கனரா வங்கியின் புதிய செயல் இயக்குநராக அசோக் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா். முன்பு செயல்பட்ட காா்ப்பரேஷன் வங்கியில் 1991-ஆம் ஆண்டு அதிகாரியாக இணைந்த அசோக் சந்திரா, எம்.காம். வரை படித்துள்ளாா். வங்கித் துறையில் ஆழமான அனுபவம் கொண்ட அசோக் சந்திரா, வங்கியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா்.

2018-ஆம் ஆண்டு பொதுமேலாளராக பதவி உயா்வு பெற்ற பிறகு கடன் திருப்பிப் பெறுதல், சட்ட மேலாண்மை, சொத்து மேலாண்மை துறைகளில் பங்காற்றினாா். இதன்பிறகு 2020-ஆம் ஆண்டு யூனியன் வங்கியின் தலைமை பொதுமேலாளராக பதவி உயா்வு பெற்றாா். தனது பணிக்காலத்தில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா். தற்போது கனரா வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அசோக் சந்திரா புதிய செயல் இயக்குநராக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டதாக கனரா வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT