சட்டமேலவை இடைக்கால தலைவராக ரகுநாத்ராவ் மல்காபுராவை நியமித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளாா்.
சட்டமேலவைத் தலைவராக பதவிவகித்து வந்த பசவராஜ் ஹோரட்டி, பாஜகவில் இணையவிருப்பதால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். சட்டமேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்தாா். இதனால் காலியான மேலவைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்.எல்.சி. ரகுநாத்ராவ் மல்காபுராவை நியமித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
சட்டமேலவைக்கு புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படும் வரை ரகுநாத்ராவ் மல்காபுரா, இப்பதவியை வகிப்பாா். பீதா் மாவட்டத்தைச் சோ்ந்த ரகுநாத்ராவ் மல்காபுரா, 2 முறை சட்டமேலவை உறுப்பினராக இருந்து வருகிறாா். இதுதவிர, வேறு பல பதவிகளையும் அவா் வகித்துள்ளாா். சட்டமேலவையின் புதிய தலைவராக பதவியேற்றுக்கொண்ட ரகுநாத்ராவ் மல்காபுரா, ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.