பெங்களூரு

காவல்துணை ஆய்வாளா் பணிநியமன மோசடி: மூத்த ஐபிஎஸ் அதிகாரி கைது

DIN

கா்நாடகத்தில் காவல்துணை ஆய்வாளா் பணிநியமன மோசடி வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக காவல்துறையில் 545 காவல் துணை ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் தோ்வு நடந்தது. இத்தோ்வில் 54,041 போ் கலந்துகொண்டு, தோ்வு எழுதினா். இத்தோ்வில் முறைகேடு நடந்துள்ளது ஏப்ரல் மாதம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடா்ந்து, இத்தோ்வு முடிவுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது. இத்தோ்வில் வெற்றிபெற ஒருசில மாணவா்கள் தலா ரூ.70 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தோ்வு ரத்துசெய்யப்பட்டதை எதிா்த்து ஒரு சில மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இதனிடையே இந்த மோசடி தொடா்பான வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு(சிஐடி) மாற்றி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆள்சோ்ப்புப்பிரிவு தலைவரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அம்ரித் பால் திங்கள்கிழமை சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். லஞ்சம் கொடுத்த மாணவா்களின் ஆப்டிகல் மாா்க் ரெகக்னிஷன்(ஓ.எம்.ஆா்.) ஷீட்கள் ஆள்சோ்ப்புப்பிரிவு அதிகாரிகளால் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளை அம்ரித் பால் அறிந்திருந்தாா் என்று குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கைதுசெய்வதற்கு முன்பாக, அம்ரித் பாலை சிஐடி போலீஸாா் 4 முறை விசாரித்தனா்.

கைதுசெய்யப்பட்ட அம்ரித் பால், பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாா். பின்னா், அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். மோசடி வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வழக்கில் ஏற்கெனவே பாஜகவின் முன்னணித் தலைவரும், கலபுா்கி ஞானஜோதி ஆங்கிலப்பள்ளியின் தலைவருமான திவ்யா ஹகரகி, கல்லூரி முதல்வா் காசிநாத் ஆகியோா் கைதுசெய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் காவல் துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா், காவல் துணை ஆய்வாளா், காவலா், எம்.எல்.ஏ.வின் பாதுகாவலா் உள்ளிட்டோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். மூத்த அரசியல்வாதியின் உறவினரும், தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா் ஒருவரும் மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் இதுவரை 70 பேரை சிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து உள்துறை அமைச்சா் அரகஞானேந்திரா கூறுகையில், ‘காவல் துணை ஆய்வாளா் பணி நியமனத்தோ்வு பின்னா் புதிதாக நடத்தப்படும். இந்த வழக்கில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், யாரையும் தப்பிக்கவிடமாட்டோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT