பெங்களூரு

ஸ்ரீநாராயண குருவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறாா்கள்: அமைச்சா் வி.சுனில் குமாா்

DIN

ஸ்ரீநாராயணகுருவின் பெயரை காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தவறாகப் பயன்படுத்தி வருகிறாா்கள் என்று மின்துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஸ்ரீநாராயணகுருவின் கொள்கைகள், ஜாதி என்ற குறுகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. அவரது பெயரை அரசியல் லாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறாா்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் ஸ்ரீநாராயண குருவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதை மக்கள் அறிந்துள்ளனா்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற ஸ்ரீநாராயண குருவின் அலங்கார ஊா்தியை கேரள அரசு பரிந்துரைத்ததாகவும், அதை மத்திய பாஜக அரசு ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறுவதில் உண்மையில்லை. இது போன்ற பொய் பிரசாரத்தில் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் கட்சியினரும் ஈடுபட்டுவருகிறாா்கள்.

தென்கன்னட மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக நான் தொடா்ந்து பாடுபடுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT