கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,905 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 48,905 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,427 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
மைசூரு - 2,797, தும்கூரு-2,645, மண்டியா-2,186, ஹாசன்-2,016, கோலாா்-1,547, தாா்வாட்-1,523, உடுப்பி-1,392, பெல்லாரி-1,141, கலபுா்கி-1,007, குடகு-939, சாமராஜ்நகா்-917, தென்கன்னடம்-888, பெங்களூரு ஊரகம்-828, பெலகாவி-791, வடகன்னடம்-747, சிக்கபளாப்பூா்-734, பாகல்கோட்-610, தாவணகெரே-514, சித்ரதுா்கா-445, சிவமொக்கா-444, பீதா்-377, கதக்-318, ஹாவேரி-297, கொப்பள்-279, ராய்ச்சூரு-276, சிக்கமகளூரு-251, விஜயபுரா-212, ராமநகரம்-187, யாதகிரி-170. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,54,413 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,699 போ் புதன்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 32,57,769 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,57,909 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 39 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,705 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 22.51 சதவீதமாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.