தென் கன்னட மாவட்டத்தின் மத்தட்கா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் இருசக்கரவாகனத்தில் பயணித்த இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
இறந்த இருவரும் பெல்தங்கடியைச் சோ்ந்தவா்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இருவரும் மத்தட்காவில் உள்ள மசூதி அருகே இருக்கும் இறைச்சிக் கடையில் வேலை செய்துவந்தனா்.
திங்கள்கிழமை இரவு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியபோது இந்த விபத்தில் சிக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.