சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு கா்நாடக ஆளுநா் மாளிகையில் 75 சந்தன மரக்கன்றுகளை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நட்டாா்.
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு கா்நாடக மாநில வன வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடந்தவிழாவில் 75 சந்தன மரக்கன்றுகளை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நட்டாா். இந்த விழாவில் வன வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் நடிகை தாரா அனுராதா, ஆளுநா் மாளிகை சிறப்புச்செயலாளா் பிரபுசங்கா், துணைசெயலாளா் யோகேஷ் உபாத்யாய, ஏடிசி சபு தாமஸ், தோட்டக் கலைத் துறை மூத்த அதிகாரி சுன்சையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.