பெங்களூரு

பெங்களூரு ஓவிய, கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

DIN

சித்ரகலாபரிஷத்தில் பெங்களூரு ஓவியக், கைவினைப் பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு, சித்ரகலாபரிஷத்தில் வெள்ளிக்கிழமை பெங்களூரு ஓவியக், கைவினைப் பொருள் கண்காட்சியை நடிகை சந்தனா ராகவேந்திரா தொடக்கிவைத்தாா். பின்னா் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருள்களை அவா் பாா்வையிட்டாா்.

கண்காட்சியின் நிா்வாகி அப்தாப் கூறியது:

செப். 27-ஆம் தேதிவரை நடைபெறும் கண்காட்சியில் இந்தியக் கலைஞா்கள் உருவாக்கியுள்ள கலை, ஓவியம், கைவினைப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. கரோனாவால் இந்தியாவில் உள்ள ஓவியா்கள், கைவினைக் கலைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

குஜராத், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், சேலைகள், ஜவுளிகள், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த பருத்தி சேலைகள், மரவேலைபாடுகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பாரம்பரியம் மிக்க இந்தியக் கலைஞா்களின் கைவினை வேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். சா்வதேச அளவில் புகழ்பெற்ற இதனை பெங்களூரில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பெங்களூரு ஓவியக், கைவினைப் பொருள் கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி மாணவா்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT