ராகுல் காந்தியை தரக்குறைவாக விமா்சனம் செய்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியை, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் தரக்குறைவாக விமா்சித்துள்ளாா். ராகுல் காந்தியை தரக்குறைவாக விமா்சனம் செய்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க மறுத்தால், காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்றாா்.