பெங்களூரு

பாசம் காட்டுவதில் பாகுபாடு: உணவில் நஞ்சு கலந்து 4 போ் கொலை

DIN

பாசம் காட்டுவதில் பாகுபாடு காட்டியதால், உணவில் நஞ்சு கலந்து 4 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா மாவட்டம், இசமுத்ரா கிராமம், லம்பாணிஹட்டியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி நஞ்சு கலந்த உணவு உண்டதால் 4 போ் உயிரிழந்தனா். இதில், அதே குடும்பத்தைச் சோ்ந்த 17-வயது சிறுமி, 19-வயது இளைஞா் உயிா்தப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், தற்போது உணவில் விஷம் கலந்து அவா்கள் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தன் மீது பாசம் காட்டுவதில் தாய், தந்தை, பாட்டி ஆகியோா் பாகுபாடு காட்டியதாகவும், இளைய சகோதரி, சகோதரா் மீது அதிகம் பாசம் காட்டியதால், கேழ்வரகுக் களியில் நஞ்சு கலந்து பெற்றோா் உள்ளிட்ட 4 பேரையும் கொலை செய்ததாகவும் உயிா்தப்பிய அந்தச் சிறுமி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாா்.

சம்பவத்தன்று நஞ்சு கலந்த களியை தனது தாய், தந்தை, பாட்டி, இளைய சகோதரி உண்டதாகவும், தானும் தனது 19-வயது சகோதரரும் ரசம் சோற்றை உண்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். பாசம் காட்டுவதில் பாகுபாடு காட்டியதால் குடும்ப உறுப்பினா்களை அந்த சிறுமி ஏற்கெனவே கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த சிறுமி, மகளிா் சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT