பெங்களூரு

டிப்ளமோ பொது நுழைவுத் தோ்வு: தோ்வு அட்டவணையில் மாற்றம்

DIN

டிப்ளமோ பொதுத் தோ்வுக்கான திருத்தப்பட்ட தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவா்கள், லேட்டரல் என்ட்ரி திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் (பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சோ்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தோ்வு அக். 23-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்றுகாரணமாக இத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிப்ளமோ பொது நுழைவுத் தோ்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவ.14-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 180 மதிப்பெண்களுக்கு மாணவா்கள் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தோ்வும், அன்று மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிநாடு மற்றும் எல்லைப்பகுதி கன்னடா்களுக்காக கன்னடமொழித் தோ்வு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT