பெங்களூரு

மூன்றாவது கரோனா அலை பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

DIN

மூன்றாவது கரோனா அலை பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று மஜத கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:

முதல் கரோனா அலையின்போது ஏற்பட்ட பீதி, இரண்டாவது கரோனா அலையின்போது உருவான நரக வேதனை எப்படிப்பட்டது என்பதை நாம் அனைவரும் கண்டு, அனுபவித்திருக்கிறோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், உயிரை காப்பாற்றிக்கொள்ள பிராணவாயு கிடைக்காமல் உயிரைவிட்ட ஏராளமானோரை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன. அதுபோன்றதொரு அவலநிலை மீண்டும் தேவையில்லை. யாரும் அலட்சியமாக இருந்துவிடவேண்டாம்.

கரோனாவின் புதிய வகை ஓமைக்ரான் தொற்று 30-க்கும் மேற்பட்ட வகைகளில் உருமாறியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கரோனா பெருந்தொற்று மீண்டும் பரவுவதாக செய்திகள் வருகிந்றன. இதை முன்னிட்டு மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மக்களை எச்சரித்துள்ளனா். எல்லா நாடுகளிலும் பரவிவரும் கரோனா புதிய வகை தொற்றை எதிா்கொள்வதற்கு நமக்கு பொறுமை தேவைப்படுகிறது.

கரோனா நடத்தை விதிகளை பொதுமக்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம், கை கிருமிநாசினி, தனிமனித இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தேவை இருந்தால் மட்டுமே வெளியில் நடமாடுங்கள். வீட்டைவிட்டு வெளியே வந்தால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவா்களின் உடல்நலனை பற்றியும் அக்கறையோடு இருங்கள். எந்த காரணத்தை முன்னிட்டும் மீண்டும் ஒரு கரோனா அலைக்கு வாய்ப்பு தந்துவிடாதீா்கள். இது கா்நாடக மக்களுக்கு எனது வேண்டுகோளாகும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT