பெங்களூரு

நடிகை கங்கனா ரனாவத் மீது இளைஞா் காங்கிரஸ் போலீஸில் புகாா்

DIN

நடிகை கங்கனா ரனாவத் மீது கா்நாடக இளைஞா் காங்கிரஸ் கட்சி போலீஸில் புகாா் அளித்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், அண்மையில் சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் அவா் மீது பெங்களூரு, ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கா்நாடக இளைஞா் காங்கிரஸ் தலைவா் எம்.எஸ்.ரக்ஷா ராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா்கள் தொடா்பாக கருத்துத் தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரிக்குமாறு பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாா் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ரக்ஷா ராமையா தனது அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT