பெங்களூரு

பொது முடக்க விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்: முதல்வா் எடியூரப்பா

DIN

பெங்களூரு: பொது முடக்க விதிகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மே 24-ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வா் எடியூரப்பா தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘கரோனா தொற்றின் சங்கிலியைத் துண்டிப்பதற்காக 14 நாள்கள் கடுமையாக்கப்பட்ட பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளோம். பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், கரோனா தொற்றுப் பரவலை முறியடிக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT