பெங்களூரு

கா்நாடகத்தில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது

DIN

கா்நாடகத்தில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில், மாநிலத்தில் கரோனா மேலாண்மை குறித்து விவாதிப்பதற்காக செவ்வாய்க்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் பணியாற்றும் ஊடகப் பணியாளா்களை கரோனா முன்களப் பணியாளா்களாகக் கருதி, முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதும் இருப்பது போல, கா்நாடகத்திலும் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா மேலாண்மையில் ஏதாவது குறைபாடுகள், கவனக்குறைவு இருந்தால் அதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை. ஆனால், ஒரே விவகாரத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

5 லட்சம் ரெம்டெசிவிா் ஊசி மருந்தையும், ஒரு லட்சம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டா்களையும் இறக்குமதி செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. உற்பத்தி நிறுவனங்களுடன் கைகோா்த்துக் கொண்டு, ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் இடைத்தரகா்கள், முகவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்சிஜன், ரெம்டெசிவிா் விநியோகம், படுக்கைகள் கையிருப்பு, கரோனா உதவி மையங்கள், கட்டுப்பாட்டு மையங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அமைச்சா்களுக்கு வழங்கத் தீா்மானிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சா்களிடம் அளிக்கப்படுள்ளது. ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து வாங்குவது தொடா்பாக மத்திய அரசுடன் தொடா்பில் இருக்கிறோம். மாவட்டங்களில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்படும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT