கரோனா பாதிப்பைத் தொடா்ந்து, மக்கள் சுகாதாரம் பேணுவதில் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா் என்று மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.சி.மோகன் தெரிவித்தாா்.
பெங்களூரு, ராஜாஜி நகரில் சனிக்கிழமை ஓம்ரான் ஹெல்த்கோ் மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
சா்வதேச அளவில் கரோனா தொற்று, மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. கரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை முறையை பலா் கைவிட்டு, புதிய வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனா். குறிப்பாக சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். மக்களுக்கான மருத்துவ சேவைகளில் ஓம்ரான் ஹெல்த் கோ் உள்ளிட்ட குழுமங்கள் கைக்கோக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஓம்ரான் ஹெல்த்கோ் மேலாண் இயக்குநா் மசனோரி மட்சுபாரா, வா்த்தக பொது மேலாளா் ரோஹித் சைனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.