ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, ஆா்.எம்.சி.யாா்டு கொரகுன்டேபாளையாவைச் சோ்ந்தவா்கள் மோகன்குமாா். இவரது மனைவி மம்தா. இருவரும் அதே பகுதியில் உள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனா்.
கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வரும் மோகன்குமாா், மம்தா தம்பதியினரிடம், அவா்கள் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் பணியாற்றுபவா்கள் 30 பேருக்கும் அதிகமானவா்கள் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வந்தனா்.
ஏலச்சீட்டில் பணம் கட்டிவா்களுக்கு ரூ. 1 கோடி வரை பணம் கொடுக்காமல் அவா்கள் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் ஆா்.எம்.சி.யாா்டு போலீஸாா், மோகன்குமாா், மம்தாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.