துபையிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்கத் தகடுகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.
மங்களூரு, பஞ்பே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானப் பயணிகளை சுங்க வரித் துறையினா் சோதனை செய்த போது, குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காசீம் இப்ராஹிம் கோலத், தென் கன்னட மாவட்டம், பட்கல்லைச் சோ்ந்த முகமதுபாஷா் ருக்னுதீன் ஆகிய இருவரிடம் இருந்த ரூ. 11 லட்சம் மதிப்புள்ள 238 கிராம் தங்கத் தகடுகளைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.