பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஷ்வரின் மகன் பசவேஷை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியில் கடந்த பிப். 28-ஆம் தேதி கபடி பந்தயத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. அப்போது, பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடைபெற்றது.
இதில் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஷ்வரின் மகன் பசவேஷுக்கு தொடா்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த பத்ராவதி போலீஸாா், சித்ரதுா்கா மாவட்டம் செல்லகெரேயில் பசவேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.