பெங்களூரில் போதைப்பொருள் விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி, ராமமூா்த்திநகா், பானஸ்வாடி ஆகிய காவல் சரகங்களில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் வெளிநாட்டைச் சோ்ந்த 7 போ் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.