விஜயபுரா அருகே இரு லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விஜயபுரா- ஹுப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 218-இல் கோலாம்ரா மேம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை காலை இரு லாரிகள் நேருக் நோ் மோதிக் கொண்டதில் மகாராஷ்டிர மாநிலம், சோலாப்புரா மாவட்டம், பானகங்வாவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் விகாஸ் அபிமான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கோலாம்ரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.