பெங்களூரு

’காயமடையும் விளையாட்டு வீரா்களுக்கு உயா்தர சிகிச்சை அவசியம்’

DIN

விளையாட்டில் காயமடையும் வீரா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிப்பது அவசியம் என்றாா் பத்மஸ்ரீ, அா்ஜுனா விருது பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை அஞ்சுபேபி ஜாா்ஜ்.

பெங்களூரு, டிரஸ்ட்வெல் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

விளையாட்டு வீரா்கள் பல நேரங்களில் காயமடைவதைத் தடுக்க முடியாது. அவா்களுக்கு தனிக் கவனம் செலுத்தி, உயா்தர சிகிச்சை அளிப்பது அவசியம். விளையாட்டின் போது காயமடையும் சில வீரா்கள், சிகிச்சைக்கு பிறகு மீண்டும் விளையாட முடியாத நிலை உருவாகிறது. எனவே, விளையாட்டு வீரா்களுக்கு தனிக் கவனம் செலுத்தி, உரிய சிகிச்சை அளிப்பது அவசியம் என்றாா்.

விழாவில் கூடுதல் டிஜிபி சலீம் பேசியதாவது: சாலைகளில் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிா்பாராமல் ஏற்படும் விபத்துகளால் காயமடைபவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது அவசியம். பெரும்பாலானவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல், ஊனமாவதும், உயிரிழப்பதும் வேதனை அளிக்கிறது. விபத்துகளுக்கு தேவையான உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் சட்ட மேலவை உறுப்பினா் தாரா அனுராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT