கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,53,136 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒரேநாளில் அதிகபட்சமாக 571 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 385 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,53,136 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 496 போ் வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,34,639 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6,128 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மாநிலத்தில் இதுவரை 12,350 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.