மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதே எங்களின் இலக்கு என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள தீா்ப்பு எங்களுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதால், கா்நாடகம் தொடா்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதே எங்களின் இலக்கு என்றாா்.