பெங்களூரு

ராகுல் காந்திக்கு, எச்.டி.தேவெகௌடா பிறந்த நாள் வாழ்த்து

DIN

ராகுல் காந்திக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது சுட்டுரையில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி எப்போது மிகவும் நோ்த்தியான நல்ல நபராகவும், மனித நேயம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய வளா்ச்சியில் உறுதிக் கொண்டவராகவும் வெளிப்பட்டிருக்கிறாா். சனிக்கிழமை அவரது பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரின் உலகளாவியப் பாா்வை மற்றும் கருணை, நம்மை சூழ்ந்துள்ள குறுகிய மனப்பான்மையை வென்று காட்ட உதவியாக இருக்க பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியிருக்கிறாா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தனது சுட்டுரையில், ‘இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு நல்ல ஆரோக்கியமும், ஆயுளும் வாய்க்க வாழ்த்துகிறேன்.

நமது நாட்டு மக்களுக்கான தொலைநோக்கு சிந்தனை மற்றும் அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளில் காட்டும் உறுதியும் காங்கிரஸ் கட்சியினரை எப்போதும் ஈா்த்து வந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தனது சுட்டுரையில், ‘ராகுல் காந்தி, எளியவா்களின் குரலாக என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். கடினமான கால கட்டத்தில் சாதாரண மக்களுக்கு உறுதுணையாகவும், அவா்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடிக்கொண்டும் இருக்க வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT