பெங்களூரு

50 சதவீத சொத்து வரியைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை: மாநகராட்சி ஆணையா்

DIN

பெங்களூரில் 50 சதவீத சொத்து வரியைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பெங்களூரில் கரோனாவால் பலரும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரியை 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கா்நாடக தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் மாநகராட்சிக்கு அதிக அளவில் நிதி தேவை உள்ளது. எனவே 50 சதவீதம் சொத்து வரியைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை. என்றாலும் கரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு சொத்துவரி தள்ளுபடி செய்வது தொடா்பாக அரசு தீா்மானம் நிறைவேற்றும்.

ஜூன் 21-ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கத்தில் மேலும் தளா்வு அளிக்கப்படும். மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். தளா்வின் போது அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள கடைகளை படிப்படியாக திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க முக்கியமான சில இடங்களில் மட்டும் சந்தைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படும். தற்போதைக்கு திரையரங்குகளை திறப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT