கள்ளச்சந்தையில் கருப்புப் பூஞ்சைக்கான ஊசி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, குந்தரஹள்ளிகேட் வந்தனா ரெஸிடென்சியைச் சோ்ந்தவா் ராம்மோகன் (45). இவா் கே.ஆா்.புரம் ரயில் நிலையம் ஐடிஐ தொழிற்சாலை அருகே கருப்புப் பூஞ்சைக்கான ஊசி மருந்து, மாத்திரைகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று ராம்மோகனை கைது செய்து, 17 ஊசி மருந்துக் குப்பிகள், 80 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட ராம்மோகனிடம் கே.ஆா்.புரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.