ஏரியில் குதித்து மத்திய ஆயுதப்படை காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், மைசூரு ஊரகத்தில் உள்ள மத்திய ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் மோகன் (36). இவா் சனிக்கிழமை காலை தனது அலுவலகத்தின் அருகே உள்ள வருணா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் உதவியுடன், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த மைசூரு ஊரக போலீஸாா், மோகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.