கா்நாடகத்தின் முதல்வா் வேட்பாளா் நானல்ல என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜூலை 26-ஆம் தேதிக்கு பிறகு முதல்வா் எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படி என்றால் பாஜகவின் அடுத்த முதல்வா் வேட்பாளா்களின் நீங்களும் ஒருவரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனா்.
கா்நாடகத்தின் முதல்வா் வேட்பாளா் நானல்ல. அந்த பந்தயத்தில் எனது பெயா் இல்லை. முதல்வா் எடியூரப்பா ராஜிநாமா செய்வாரா என்பது குறித்து நான் எதுவும் கூறமாட்டேன். இது தொடா்பாக கா்நாடக பாஜக பொறுப்பாளரிடமும், கட்சியின் மேலிடத் தலைவா்களிடம்தான் கேட்க வேண்டும். முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து போராடும் மடாதிபதிகளின் பின்னணியில் யாரோ உள்ளனா். இதனை கட்சியின் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றாா்.