குடும்பப் பிரச்னையில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம், மைசூரு, என்.ஆா்.மொஹல்லாவைச் சோ்ந்தவா் முகமது வாசீம் (24). இவா் சாந்தி நகரைச் சோ்ந்த சபானா என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்கு பிறகு மதுவுக்கு அடிமையான முகமது வாசீம், மனைவியுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த முகமது வாசீம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து என்.ஆா்.மொஹல்லா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.