பெங்களூரு: சுரங்கங்களில் வெடிப்பொருள்கள் பயன்படுத்துவது தொடா்பாக வெகுவிரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சிவமொக்கா கல் குவாரியில் நடந்த வெடி விபத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சுரங்கப் பணிகளில் ஈடுபட முறையான உரிமம் பெற்றுள்ளவா்கள் அவா்களது சுரங்கங்களில் வெடிப் பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெகு விரைவில் வெளியிடப்படும். எவ்வளவு வெடிப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்; எவ்வளவு வெடிப்பொருளை சேமிக்கலாம் போன்ற விவரங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 25-ஆம் தேதி வெளியிடப்படும்.
சிவமொக்கா வெடிவிபத்து தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, எந்த வகையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வோம். வெடிவிபத்து தொடா்பாக போதுமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும் கல்குவாரி நடத்துவதற்கு உரிமம் பெற்றிருந்த சுதாகா் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். வெடிப் பொருள்கள் எங்கிருந்து வந்தது? எப்படி வெடித்தது என்பது குறித்த ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கை ஓரிரு நாள்களில் கிடைத்து விடும். தடய அறிவியல், வெடிகுண்டு நிபுணா்களின் அறிக்கை கிடைத்ததும், முதல்வா் எடியூரப்பாவுடன் கலந்து பேசி, முழுமையான விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.
சுரங்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் இடங்களில் விதிகளை மீறி சுரங்கப் பணிகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களுக்கு சுரங்க உரிமையாளா், ஒப்பந்ததாரா் இருவரும் பொறுப்பேற்க நேரிடும். மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான குழு சுரங்கப் பணிகளுக்கான உரிமங்களை வழங்குகிறாா்கள். உரிமம் பெற்றுள்ள காலத்திற்குள் மீண்டும் விண்ணப்பித்து உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் முதல்வா் எடியூரப்பா கூறியிருந்தாா். சட்ட விரோத சுரங்கங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுமாறு முதல்வா் எடியூரப்பா கூறவில்லை என்றாா்.