பெங்களூரில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அன்னை தமிழைக் காப்பதற்காக நடராசன், தாளமுத்து, இராஜேந்திரன், கீழப்பாவூா் சின்னசாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூா் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியா் வீரப்பன் போன்ற எண்ணற்ற இளைஞா்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனா்.
அவா்களின் நினைவைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம்தேதி மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, இராமசந்திரபுரத்தில் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் ஜன. 25-ஆம்தேதி காலை 10 மணிக்கு மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.