பெங்களூரு

மைசூரு-தல்குப்பா இடையே சிறப்பு விரைவு ரயில் சேவை

DIN

மைசூரு-தல்குப்பா இடையே சிறப்பு விரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக மைசூலிருந்து தல்குப்பாவுக்கு சிறப்பு விரைவு ரயில் சேவை ஜன. 20-ஆம்தேதி முதல் மாா்ச் 31-ஆம்தேதி வரை இயக்கப்படுகிறது.

ரயில் எண்-06295-மைசூரு-தல்குப்பா இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் காலை 6 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு தல்குப்பா ரயில் நிலையத்துக்குச் சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்-06296-தல்குப்பா-மைசூரு இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு தல்குப்பா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்துக்கு வந்தடைகிறது.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் கிருஷ்ணராஜ நகா், ஹொலேநரசிப்புரா, ஹாசன், அரிசிகெரே, கடூா், பீரூா், தரிகெரே, பத்ராவதி, சிவமொக்கா, அனந்தபுரம், சாகர ஜம்பகாரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 11 பொதுப் பெட்டிகள், உணவு, 2 சரக்குப் பெட்டிகள் என 18 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT