மைசூரு-தல்குப்பா இடையே சிறப்பு விரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக மைசூலிருந்து தல்குப்பாவுக்கு சிறப்பு விரைவு ரயில் சேவை ஜன. 20-ஆம்தேதி முதல் மாா்ச் 31-ஆம்தேதி வரை இயக்கப்படுகிறது.
ரயில் எண்-06295-மைசூரு-தல்குப்பா இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் காலை 6 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு தல்குப்பா ரயில் நிலையத்துக்குச் சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், ரயில் எண்-06296-தல்குப்பா-மைசூரு இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு தல்குப்பா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்துக்கு வந்தடைகிறது.
இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் கிருஷ்ணராஜ நகா், ஹொலேநரசிப்புரா, ஹாசன், அரிசிகெரே, கடூா், பீரூா், தரிகெரே, பத்ராவதி, சிவமொக்கா, அனந்தபுரம், சாகர ஜம்பகாரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரயிலில் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 11 பொதுப் பெட்டிகள், உணவு, 2 சரக்குப் பெட்டிகள் என 18 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.