பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 74.81 லட்சம் ரொக்கப் பணத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னையில் சுங்கவரித் துறையில் பணியாற்றி வரும் அதிகாரி முகமது இா்பான் அகமது, அவரது மனைவி ஆகியோா் பெங்களூருக்கு சாலை வழியாக வந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்திலிருந்து லக்னௌவுக்கு விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்தனா்.
அதன்படி செவ்வாய்க்கிழமை பெங்களூரு வந்த அவா்கள் விமான நிலையத்துக்குள் பெட்டி, பைகளுடன் சென்றனா். பின்னா், விமானத்துக்குள் செல்ல அச்சமடைந்த இா்பான் அகமதுவின் மனைவி, அவா் வைத்திருந்த பையை விமான நிலையத்தில் இருந்த கழிவறையில் வீசிவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் அவா் வீசிச் சென்ற பையை எடுத்துப் பரிசோதனை செய்ததில் ரூ. 74,81,500 ரொக்கம் இருந்தாம். இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் முகமது இா்பான் அகமது, அவரது மனைவியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.