பெங்களூரு, அம்ருத்தள்ளி காவல் நிலையத்தில் ஜன. 11-ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, அம்ருத்தள்ளி காவல் நிலையத்தில் ஜன. 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 22943644 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.