பெங்களூரில் பிப். 28-ஆம் தேதி அறிவியல் சுவரொட்டி கண்காட்சி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோளரங்கத்தில் பிப். 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ’2020-ஆம் ஆண்டின் அறிவியல் சாதனைகளின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அறிவியல் சுவரொட்டி கண்காட்சி நடக்கவிருக்கிறது.
2020-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், செவ்வாய்க் கிரகத்துக்கு நாசா அனுப்பியுள்ள பொ்சிவரன்ஸ், நிலவுக்கோளான சாங்கே-5, இன்போசிஸ் பரிசு பெற்ற சாதனையாளா்கள் உள்ளிட்ட தலைப்புகளில் சுவரொட்டிகள் இடம் பெற்றிருக்கும். இதை பொதுமக்கள் பாா்வையிட வரலாம். அனுமதி இலவசம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.