தூத்துக்குடியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சீா்வரிசைகளுடன் இலவச திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி சில்வா்புரத்தில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில், நன்கொடையாளா்கள் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு சுயம்வரம் மூலம் தோ்வான 6 மணமக்களுக்கு மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் திங்கள்கிழமை திருமணத்தை நடத்தி வைத்தாா். பின்னா் மணமக்களுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், லூசியா இல்ல இயக்குநா் ஜான் செல்வம் மற்றும் நன்கொடையாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.